பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் – தினமணி செய்தி
‘புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி’ என யுனெஸ்கோவால் பாராட்டப்பட்டவர் ஈ.வே.ரா. பெரியார். ஆனால் அவருடைய சிந்தனைகள் நூல்வடிவம் பெறுவது அவ்வளவு எளிமையானதாக இல்லை.
அவருடைய எழுத்தும் பேச்சும் நூல்வடிவம் பெறுவதற்கு அரும்பாடுபட்டவர் வே.ஆனைமுத்து. பெரியார் உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே அதற்கான முயற்சியைத் தொடங்கி மூன்று பெரும் வால்யூம்களாக அதைத் தொகுத்தவர்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்’ என்ற அந்த நூல் தொகுப்பு மீண்டும் வெளியாக இருக்கிறது. இரண்டாயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட அது இப்போது இருபது தொகுதிகளாக வெளியாக இருக்கிறது. தம் ஐம்பதாம் வயதில் இந் நூல் தொகுப்பை வெளியிட்ட வே. ஆனைமுத்து இப்போது தம் எண்பத்தாறாம் வயதில் மீண்டும் இந்த முயற்சியை மேற் கொண்டிருக்கிறார்.
அந்த அத்தனைப் பிரதிகளையும் பெரியார் ஒரு பக்கம் விடாமல் வாசித்தார்… அல்லது படிக்கச் சொல்லிக் கேட்டார். கூறியது கூறல் திரும்ப இடம்பெற வேண்டாம் என்று சிலவற்றை நீக்குமாறு சொன்னார். சிலவற்றைச் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக நாங்கள் சேகரித்திருந்த கட்டுரைகளில் இரங்கல் கடிதங்கள் என்று ஒரு பகுதி உண்டு. அதில் நாகம்மை மறைவுக்கு எழுதியதைச் சேர்க்கலாமே என்றார். எப்படியோ விடுபட்டுப் போயிருந்தது. மறுநாளே தேடி எடுத்து அந்தக் கட்டுரையைக் கொண்டு போனேன். வாசிக்கச் சொன்னார். முதல்வரியை வாசித்ததும் இரண்டாம் வரியில் இருந்து அவர் அப்படியே திரும்பச் சொல்ல ஆரம்பித்தார். ‘நாகம்மை இறந்து போனதை ஒரு துணை போயிற்று என்று சொல்வேனா?, ஒரு அமைச்சு போயிற்று என்று சொல்வேனா? ஒரு அடிமை போயிற்று என்று சொல்வேனா? எல்லாம் போயிற்று என்று சொல்வேனா?..’ என அவர் நினைவில் இருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டார். நாகம்மை இறந்தது 1933-ல். நான் இதை வாசித்துக் காண்பித்தது 1973-ல். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள்.. அவர் தன் தழுதழுத்தக் குரலில் சொல்லி முடித்துவிட்டு கண்கலங்கினார். அது மறக்க முடியாத அனுபவம்.
7.3.70-ல் ஆரம்பித்த இப்பணி 73-ம் ஆண்டில் முடிந்தது. 3.9.73-ல் இதைப் பதிப்பிக்கும் உரிமையை பெரியார் திருச்சி சிந்தனையாளர் கழகத்துக்கு அளித்தார். ஏறத்தாழ அவர் வாசித்து அளித்த எல்லா பக்கங்களிலுமே பெரியார் கையெழுத்திட்டிருக்கிறார். கைப்பட உரிமை வழங்கியும் எழுதிக் கொடுத்தார்.
இரண்டாம் பதிப்புக்கு இவ்வளவு காலதாமதம் ஆனது ஏன் என்று கேட்கலாம். அதற்கு முதல்பதிப்பு வெளியிட்ட அனுபவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதல் பதிப்புக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவாகும் என்று உத்தேசிக்கப்பட்டது. தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட தொகை 80 ஆயிரத்தைத் தாண்டவில்லை. வட்டியில்லா கடனாக 20 ஆயிரம் ரூபாயும் வட்டிக்கு அறுபதாயிரம் ரூபாயும் வாங்கி, திருவல்லிக்கேணி கபீர் அச்சகத்தாரிடம் ஒப்படைத்தோம். 500 படிகள் பைண்ட் செய்த நிலையில் அச்சகம் ஏலம் போகவேண்டிய நிலைக்கு ஆனது. அச்சாகியிருந்த பாரங்களை அப்படியே பண்டல்களாகக் கட்டி பத்திரப்படுத்தி வைத்தோம். நூலகத்துக்கு 300 படிகள் மட்டுமே வாங்கப்பட்டது. அதைக் கொண்டு வட்டியில்லா கடனை அடைத்தோம். அதன் பிறகு 79-ம் ஆண்டில் நூலகத்துறையினர் இந் நூல் பிரதிகளை வாங்கிக் கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினர். வட்டிக்கு வாங்கிய பணத்தை அடைத்து முடித்தோம். பிரதிகளைப் பாதுகாத்து வைப்பது பெரும்பாடாக இருந்தது.
இப்போதும் முன்பதிவு திட்டத்தின் கீழ் பதிப்பைத் தொடங்கியிருக்கிறோம். இருபது தொகுதிகள் கொண்ட இந் நூல், பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. வெளியானதும் இதன் விலை 5,300 ரூபாய்க்குக் கிடைக்கும். இப்போது ரூ. 3, 800-க்கு முன்பதிவு திட்டத்தின் கீழ் பதிவு செய்கிறோம். டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி வரை இதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய தொகுதியைவிட மூன்று சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முதல் சிறப்பு முன்னர் வந்த தொகுதியைப் போல இரண்டு மடங்கு நூலாக இது தயாராகி வருகிறது. குடியரசு துவங்குவதற்கு முன் நாடார் குலமித்ரன், தி இந்து, சுதேசமித்ரன், திராவிட நாளேடு, சண்ட மாருதம், மாலைமுரசு போன்ற இதழ்களில் வெளியான பேட்டிகள் கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன.
இரண்டாவது சிறப்பு அப்போதைய பலருடைய பெயர்கள் இப்போது பலருக்குத் தெரியாது. அதனால் அவர்களைப் பற்றிய விவரமான அடிக்குறிப்புகளும் இதில் இடம் பெறுகின்றன.
மூன்றாவது பெரியார் என்றதும் கடவுள் மறுப்பு, பெண் சுதந்திரம், சாதி ஒழிப்பு போன்ற கருத்துகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் உலக சமுதாயம், மனிதநேயம், சமத்துவம், அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட 72 துறைகள் பற்றிப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவை இந்த நூல்கள் மூலம் தெரியவரும்.
அவருடைய சிந்தனைகளை நூல்வடிவமாக்க முனைந்த போது பெரியார் குறிப்பிட்ட ஒரே கருத்து கூறியது கூறல் இடம் பெற வேண்டாம் என்பதுதான். அதை அவர் கைப்படவே திருத்தியும் கொடுத்தார். நாங்களும் அதில் கவனமாக இருந்தோம்.
பெரியாரின் எழுத்தும் பேச்சும் நாட்டுடமை ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது காலத்தின் கட்டாயம்” என்றார் ஆனைமுத்து.
நன்றி: தினமணி கதிர்
புத்தக முன் பதிவுக்கு
புத்தகம் பற்றி மேலும் அறிந்துகொள்ள
புத்தகம் பற்றிய பாவலர் வையவனின் கவிதை
தோழர் ஆனைமுத்துவுடன் ஓர் சந்திப்பு!
இம்முறை தமிழகம் போகும் போது கண்டிப்பாக தோழர் ஆனைமுத்துவையும் [1] சந்தித்துவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்கேற்றார் போல் வாய்ப்பும் கிடைத்தது.
பாண்டிச்சேரியில் மகள் வீட்டுக்கு வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தும் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி வைத்துவிட்டார்கள் தோழர்கள். காலை பத்து மணியளவில் அவருடைய மகள் வீட்டுக்குச் சென்றோம். பெரியாருடன் இருந்த முதிய தோழரை சந்திக்கப் போகிறோம் என்னும் பதட்டமும், ஆவலும் அதிகமாக இருந்தது.
1952-இல் இருந்து பெரியாருடன் இணைந்து தீவிரமாக இயக்கப்பணிகளை செய்துக் கொண்டிருந்தவர் தோழர் ஆனைமுத்து. 1963-இல் இருந்து தினமும் பெரியாருடன் இணைந்திருக்கும் வாய்ப்பை பெற்றிருந்தவர். 1957-இல் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் 18-திங்கள் கடும் தண்டனையாக சிறையில் அடைக்கப்பட்டவர். 1974-இல் பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் தொகுத்து பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் என்று தொகுதிகளாக வெளியிட்டவர்.
1975-இல் தி.க தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தி.க வில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பிறகு இன்னும் தீவிரமாக இயங்கியவர் தோழர் ஆனைமுத்து. நாம் அவரை சந்திக்க சென்ற போது கூட பெரியாரின் சிந்தனைகளை மீண்டும் நூல்களாக வெளியிடும் பணியில் இருப்பதாக அறிந்தோம்.[2]
84-வயதான தோழர் ஆனைமுத்து இன்னமும் கொள்கைப்பிடிப்புடனும் அதை செயல்படுத்துவதிலும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன். அவருடன் இருந்த சில மணிநேரங்களில் அத்தனையும் உண்மைதான் என்பதை உணர்ந்தேன்.
அருகில் இருந்த உதவியாளரிடம் ´சிந்தனையாளன்´ பத்திரிகை பணிகள் குறித்து பேசுவதும், அடிக்கடி வரும் தொலைபேசிகளுக்கு பதில் அளித்துக் கொண்டும், எம்மோடும் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருந்தார். எந்த கேள்வி கேட்டாலும் வருடம், தேதி என ஆதாரத்தோடு பேசுகிறார். அவரின் நினைவாற்றல் அபாரமாக இருக்கிறது. எதையும் யோசித்து பேசுவதில்லை. சடசடவென பதில்கள் வருகிறது.
இந்தியக் கல்வி திட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.
பொதுக்கல்வி, அறிவியல் கல்வி, தொழில் நுட்பக் கல்வி இவற்றில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், அந்த படிப்பின் காரணமாக படித்தவர்கள் எல்லாம் பகுத்தறிவாளர்களாகவில்லை. இதுதான் இன்றைய இந்தியாவின் இருப்பு நிலையாக இருக்கின்றதே. ஏன்?” என்ற கேள்வியை முன்வைத்தோம்.
இந்தியாவிலுள்ள எல்லா வகுப்பினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு, இந்திய அரசாங்கக் கல்வி, இந்திய அரசாங்க வேலை, மாநில அரசாங்கக் கல்வி, மாநில அரசாங்க வேலை ஆகியவற்றில் கிடைத்திட வகை செய்வதற்கு ஏற்ப அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று 1978-இல் இருந்து கிட்டத்தட்ட 30-ஆண்டுகளாக பீகார், உத்திரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அசாம், டில்லி, ஆந்திரா, கேரளா முதலான மாநிலங்களுக்கும் சென்று பரப்புரை கிளர்ச்சி செய்து வரும் தோழர் ஆனைமுத்துவிடம், இந்தியக் கல்வித் திட்டத்தைக் குறித்து பேசும் தகுதியும், சிந்தனையும் இருப்பதால் இந்தியக் கல்வித் திட்டத்தைக் குறித்த கேள்வியை முன்வைத்தோம்.
தோழர் ஆனைமுத்துவும் தெளிவாக இந்திய கல்வி குறித்து விளக்கினார்.
கல்வித் திட்டத்தில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் மதநம்பிக்கை சார்ந்த கல்வியே கற்பிக்கப்படுகிறது. அரசாங்க கல்வியிலும் அப்படியே. தனியார் கல்வியிலும் அப்படியே. மதநிறுவனங்கள் சார்பிலும் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் அப்படியே. இப்படிப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் எவ்வளவு காலத்திற்கு கல்வி பெறுகிறார்கள். பகுத்தறிவு பெற்றுக் கொள்ள வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
பெரியார் இயக்கம் போன்ற வெளியில் உள்ள தூண்டுதல் காரணமாக படித்தவர்கள், படிக்காதவர்கள் இவர்களுள் எப்போதுமே ஒரு சில பேர் மட்டுமே பகுத்தறிவாளர்களாக உருவாக முடியும்.
பெரியார் 50-ஆண்டுகள் பரப்புரை செய்த பிறகு இப்போது அவருடைய இயக்கத்தினர் அதேக் கொள்கையை பரப்புரை செய்த பிறகு 80-ஆண்டுகள் கழித்து மிகச் சிலரே பகுத்தறிவாதிகளாக இருக்கிறார்கள். படிப்புத் திட்டம் இப்படி இருக்கிற வரையில் இதே நிலைமை தான் நீடிக்கும் இதை அடியோடு மாற்றுவதற்கு பெரியார் சொன்ன வழி
1-கல்வி என்பது அரசாங்கத்தினால் மட்டுமே தரப்பட வேண்டும்.
2-கல்வியில் இருந்து மதம் என்பது அறவே பிரிக்கப்பட வேண்டும்.
3-அரசின் அன்றாட நடப்பில் இருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட நிலை உருவாக்கப்பட்டாலன்றி பகுத்தறிவு வளராது. இன்றுள்ள நிலையே நீடிக்கும்.
இந்தியாவில் கல்வி அரசினால் மட்டுமே கல்வி தரப்படும் நிலையை பெரியார் தொணடர்கள் உண்டாக்க வேண்டும். அப்படி தரப்படும் கல்வி, மதம் சாராத கல்வியாக இருக்கும்படி பெரியார் தொண்டர்கள் முயற்சிக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசை பெரியார் தொண்டர்கள் உருவாக்க வேண்டும்.
திராவிடர் கட்சி ஆட்சியாக எது இருந்தாலும் அந்தக் கட்சி ஆட்சி தனக்கென்று ஒரு கல்விக் கொள்கையை கொண்டிருக்க முடியாது. இந்திய அரசு வகுக்கும் கல்விக் கொள்கையை ஏற்றதான் ஒவ்வொரு மாநில அரசும் கல்வியைத் தர வேண்டும்.
இந்த நிலை மாற்றப்படுவது மிகவும் இன்றியமையாதது. இன்றைக்குள்ள அமைப்பில் தமிழ்நாடு மட்டுமோ, இன்னொரு மாநிலம் மட்டுமோ தனியாக முயற்சித்து இப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுவர முடியாது. எனவே பெரியார் அவர்கள் 1971-இல் அறிவுறுத்தியபடி திராவிடர் இயக்கம் அகில இந்திய இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். இந்த அறிவுரையையும் பெரியார் தொண்டர்கள் அறிந்திருக்கப்படவில்லை. திராவிட வாக்கு வேட்டை கட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியாவில் ஆட்சி வடிவங்கள் மாறினாலும், ஆளும் கட்சிகள் மாறினாலும் ஆளும் வர்க்கத்தால் காலந்தோறும் மாறினாலும் அவர்களை இயக்குகின்ற இந்திய அரசு என்னும் இயந்திரம் மதத்தையும் மதம் சார்ந்த கல்வியையும் மதம் சார்ந்த விழாக்களையும், பண்டிகைகளையும் அழியாமல் பார்த்துக் கொள்வதை நோக்கமாகவே கொண்டவையாகும்.
தோழர் ஆனைமுத்துவின் இந்திய கல்வி குறித்த சிந்தனையில் நமக்கும் எந்த ஆட்சேபமும் இருக்காது. மிகத் தெளிவான தற்போதைய நிலையை விளக்கி இருக்கிறார். அப்படியானால் இந்திய அரசு இந்து சாஸ்திரங்களையும், இந்து மத அரசமைப்புச் சட்டங்களையும் பாதுகாப்பதில் இன்னும் தீவிரமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறதா?
கண்டிப்பாக என்கிறார் தோழர் ஆனைமுத்து.
“எடுத்துக்காட்டாக பாருங்கள், பெரியார் சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்த காலத்தில் 1926-இல் (26.12.1926) திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு ஆண்டு வருமானம் 20-இலட்ச ரூபாய். அன்றைய பவுன் விலை 15-ரூபாய் இன்று 80-ஆண்டு பகுத்தறிவு பிரசாரம் முடிந்த பிறகு திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு ஆண்டு வருமானம் 1,600-கோடி ரூபாய். காணிக்கை வருமானம் 20-கோடி ரூபாய். இவையில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் ஏறக்குறைய 32-ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் வெங்கடேச பெருமாளுக்கு சொந்தமாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்களை உடைமைகளாக வைத்துக் கொள்ள வெங்கடாசலப்பதி என்னும் கல்பொம்மைக்கு சட்டப்படி உரிமை உண்டு. அதாவது உயிர் இல்லை, உண்பது இல்லை, குடும்பம் நடந்துவது இல்லை என்றாலும் சொத்து வைத்துக் கொள்வது என்கிற அந்த காரியத்தை செய்வதற்கு மட்டும் ´வெங்கடாசலபதி´ சட்டப்படி உரிமை உள்ள மனிதனாக கருதப்பட்டு சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாட்டை இந்து சாஸ்திரங்கள், இந்து மதம், இந்து சட்டம், அரசமைப்புச் சட்டம் எல்லாம் 2009-இல் காப்பாற்றுகின்றன” என்கிறார் தோழர் ஆனைமுத்து.
அடுத்து பெண் விடுதலை குறித்த கேள்வியை எழுப்பினோம்..
“இந்தியாவில் உள்ள பெண் விடுதலை இயக்கங்கள் ஒவ்வொரு ஆணையும் கணவன் என்ற நிலையில் வைத்து ஒவ்வொரு கணவனும் மனைவிக்கு இழிக்கிற சித்திரவதைகள், கொடுமைகள், வன்புணர்ச்சி, உரிமை மறுப்பு இவற்றை மட்டுமே மையமாக வைத்து இவற்றில் இருந்தே விடுதலை பெற வேண்டும் என இயங்குகின்றன. ஆனால் இவை மட்டுமே போதாது. ஒவ்வொரு பெண்ணையும் குடும்பத் தலைவி என்று மட்டும் சித்தரித்து விட்டு, சமையல் வேலை, வீட்டு வேலை, பிள்ளை பெறும் வேலை, பிள்ளை வளர்க்கும் வேலை, இவ்வளவு கால்கட்டுக்களை போட்டு விட்டு பெண்ணுக்கு சமகல்வி, உரிமை மறுத்தல், சொத்தில் பங்குதர மறுத்தல், துணைவரைத் தேடிக் கொள்ள உரிமை தரமறுத்தல், மறுமணம் பெறும் உரிமையை மறுத்தல் முதலான மதம் சார்ந்த கொடுமைகளை எதிர்ப்பதில்லை. அத்துடன் சொத்து, வேலை வாய்ப்பு, உயர் படிப்பு இவற்றில் சமபங்கு அதாவது 50% விழுக்காடு வேண்டும் என்று போராடுவது இல்லை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது மட்டுமே பெண் விடுதலை போராட்டம் ஆகும். இது சமதர்ம அரசு அமைப்பு அமைக்கப்படுவதிலேயே சாத்தியமாகும்”
என்று இந்தியப் பெண்களின் விடுதலை குறித்த கருத்தை சுருக்கமாக கூறினார் தோழர் ஆனைமுத்து.
பெண் விடுதலைக் குறித்து இன்றைய பெண்களின் பெண்ணுரிமைச் சிந்தனை என்பது எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் தோழர்…
“இந்தியாவில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள், மலைவாழ் வகுப்பு பெண்கள், இஸ்லாமியப் பெண்கள் கல்வி பெறாதவர்களாக வைக்கப்பட்டிருக்கின்றனர். முதலில் இந்த நிலையை மாற்ற வேண்டும்.
திருத்தப்பட்ட இந்து சட்டப்படி இந்து பெண்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் நடைமுறையில் உரிமை இயல் துறையில் செயல்பாட்டுக்கு வர அரசும், மக்களும், கட்சிகளும் இணைந்து வழிகாண வேண்டும். உள் சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும் அகமண முறை மாறுவதற்கு சட்டத்தில் தடை இல்லை. ஆனால் நடப்பில் வரவில்லை. இவையெல்லாம் பற்றி முதலில் உயர்நிலை கல்வி திட்டத்தில் விரிவான பாடங்கள் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இன்னும் ஒரு தலைமுறைக் காலத்திலாவது பெண்கள் தாங்களே உரிமைக்கு போராட வருவார்கள்.
பெண்கள் உரிமைக்காக ஆண்கள் போராடுவார்கள் என எப்போதும் நினைக்கக் கூடாது. வீடுதோறும் நடைப்பெறுகின்ற பார்ப்பனியச் சடங்குகள், புரோகிதரை அழைக்கும் சடங்குகள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் காலகாலமாக நடைபெறுவது உயர்ந்தது மேலானது என்னும் மூடநம்பிக்கை மக்களிடமிருந்து ஒழியும். இத்துடன் பெண்களுக்கு சட்டமன்றங்கள், நாடாளுமன்றம், ஊராட்சி மன்றங்கள், அரசு அலுவலகங்கள் பெண்மக்களுக்கு சரி பாதி 50% விழுக்காடு ஒதுக்கி கொடுக்கப்பட சட்டப்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.”
என்று தோழர் ஆனைமுத்து தமது பெண்ணிய சிந்தனைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார். தற்போதைய தி.க அமைப்பு மற்றும் பெ.தி.க செயல்பாடுகளைக் குறித்து கருத்து கேட்ட போது அவற்றைக் குறித்து கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்றார்.
பெரியார் சிந்தனைகள் மீண்டும் புத்தகமாக கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் தோழர் ஆணைமுத்துவின் சீரிய பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” இரண்டாம் பதிப்பு 2010- பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ளது.
*ஆனைமுத்து பற்றிய குறிப்புகள் [1]
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
*பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு முன்பதிவுத் திட்டம்! [2]
http://sinthanaiyaalan.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/
நன்றி: தமிழச்சி
தொகுப்பு: தமிழச்சியின் தளத்திலிருந்து
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு முன்பதிவுத் திட்டம்
வெள்ளைக் காக்கைகள் பாவலர் வையவன்
கற்சிலைக்கு முன்னால் நின்று
பக்தியோடு பாடிக்கொண்டு
இடக் கையால் மணியாட்டி
வலக்கையால் கற்பூரத் தட்டை
என்னாலும் ஆட்டமுடியும் சாமி …
ஏராளமான மந்திரங்களை
மனப்பாடமாய் மூச்சிரைக்கக் கத்தி
நெருப்பிலே நெய்யூற்றிப் புகையாக்கி
கல்யாணமும் கருமாதியும்
என்னாலும் செய்யமுடியும் சாமி …
அதெப்படிடா முடியும் அம்பி?
நீ சூத்திரனோல்லியோ …
அதுக்குத் தகுதி வேண்டாமோ?
அப்படியா சரி… நான்
அய்.அய்.எம்.எஸ்., அய்.அய்.டி., அய்.அய்.எஸ்.,
இதுலல்லாம் சேர்ந்து படித்து
என் தகுதியை உயர்த்திக்கப் போறேன்.
அதுவும் முடியாதுடா அம்பி!
அப்புறம் அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட்லாம் எதுக்கு இருக்கு?
மண்டாட்டம் பேசறியே!
அதுக்கெல்லாம் திறமை வேண்டாமோ?
நூற்றுக்கு நூறு வாங்கணும்…
எழுபது, எண்பதெல்லாம்
போறாதுடா அம்பி!
உன்னைவிட மார்க்கு அதிகமா எடுத்த
ஓ.சி. கேண்டிடேட்ஸ் இருக்காளோல்லியோ
அவா படிச்சு அந்த வேலைக்கு வந்தாத்தான்
அந்த பதவிகளுக்கும் ஒரு கவுரவம்.
மணியாட்டனும்னா
தகுதி இல்லங்கறேள்
படிச்சு மேல வர்ரேன்னா
திறமை இல்லங்கறேள்
நாங்க வேற என்னதான் செய்யறது சாமி …
நன்னா கேட்டேடா அம்பி! சமத்து
கோயிலுக்கு போனா
உண்டியல்ல காசப் போடு!
பூத்துக்குப் போனா
பொட்டியில ஓட்டப் போடு!
உசிருள்ள வரைக்கும்
ஓயாமப் பாடுபடு!
ஏதோ கெடச்சத சாப்டுட்டு
மெகா சீரியல் பாத்துண்டே சாவு!
இதெல்லாம் ஆண்டவனாப் பாத்து
அவாவாளுக்கு எழுதிவச்சதுடா அம்பி!
புரிஞ்சுதோன்னோ!
நல்லாப் புரிஞ்சுதுங்க சாமி!
நீங்க – தகுதி திறமைங்கற பேர்ல
கழுதைப் புண்ணைத் திங்கிற
காக்காக் கூட்டமுன்னு …
த்தூ… போங்கடா!
நீங்களும்
உங்க தகுதியும்… திறமையும்…
மக்களே எங்கள் மக்களே! தமிழேந்தி
மக்களே எங்கள் மக்களே!
எத்தனை முறைதான் தோற்பீர் – அந்தோ
மக்களே எங்கள் மக்களே!
குருதி நக்கிய கையுடன் வெற்றிக்
குலுக்கலோ எம் மக்களே – நமை
எரித்தே அழித்த இனப்பகை யோடா
இளிப்பும் களிப்பும் மக்களே?
துரோகப் பரம்பரை நேரு பரம்பரை
சோனியா மாற்றோ மக்களே – அவர்
தோகை மயிலா தூக்குக் கயிறா
காலம் சொல்லும் மக்களே?
முல்லைப் பெரியாறு பாலாறு காவிரி
மொத்தமாய் நாமம் மக்களே – நலம்
எல்லாம் கொல்லும் தில்லிக் கேநாம்
ஏவல் நாய்களோ மக்களே!
சீக்கியன் அங்கே டைட்லர் சஜ்ஜனைச்
செருப்பால் அடிக்கிறான் மக்களே – இங்கு
நாக்கை நீட்டி நத்திப் பிழைப்பது
எத்தனை நாள்தான் மக்களே!
“ஒற்றை இந்தியா’ “ஒன்றே சந்தை’
ஊரை ஏய்க்கிறார் மக்களே – எவர்
கற்றை மயிரைப் பிடுங்கிக் கட்ட
கழிசடைத் தேர்தல் மக்களே?
அம்பா னிக்கும் டாடா வுக்கும்
அடிமைத் தேசம் மக்களே – இதில்
அத்வா னிக்கும் மன்மோக னுக்கும்
அடியாள் வேலைதான் மக்களே!
நிலமோ உணவோ படிப்போ இல்லை
நெருப்பில் வாழ்க்கை மக்களே – நாம்
பலப்பல தேர்தல் பார்த்தும் இன்னும்
பாழாய்ப் போவதோ மக்களே!
“காட்”ஒப் பந்தம் அணுஉடன் பாடெலாம்
கழுத்த றுப்புக்கே மக்களே – நாம்
காட்டவேண் டாமா யார்என் பதனைக்
கண்திறப் பீரோ மக்களே?
தோழர் வே.ஆனைமுத்து பணிகளுக்குத் துணையிருப்போம்! இசையமுது
இடஒதுக்கீட்டின் பயனாக அரசுப் பணிகளில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று, வசதிகள் அடைந்துள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பு மக்கள் இதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அண்ணல் அம்பேத்கரையோ, தந்தை பெரியாரையோ நினைத்தும் பார்ப்பதில்லை. நன்றி பாராட்டாத இந்த மக்களுக்கான கடமைகளைத் தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை ஆற்றி முடிக்கச் சூளுரைத்து அதன்படியே வாழ்ந்தவர் தந்தை பெரியார் ஆவார். அவரின் அணுக்கத் தொண்டராகத் தம்மை வரித்துக் கொண்டு பெரியாரியலை உலகுக்கு உணர்த்தி வருபவர் தோழர் ஆனைமுத்து அவர்கள் ஆவார்.
தந்தை பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் நிரல்படத் தொகுத்து “பெரியார் ஈ.வ.ரா.சிந்தனைகள்’ என்ற மூன்று பெரும் தொகுப்புகளை வெளியிட்டதன் வழியாகப் பெரியாரை, படித்தவர் நெஞ்சில் பெரியாரை நிலைக்கச் செய்து விட்டார். தந்தை பெரியாரை மிகச் சிறந்த தத்துவமாகவே உணர்ந்த இவர் எழுதிய “பெரியாரியல்’ பல்கலைக் கழகங்கள் பாராட்டிப் பயிலும் நூலாகியுள்ளது. தந்தை பெரியாரின் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு; சமுதாய மேம்பாட்டிற்கான போராட்ட குணம் ஆகியவற்றோடு சமூக நீதிக்கான குரலையும் ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர் தோழர் ஆனைமுத்து அவர்களே!
1978இல் பாட்னா, பீகார் மற்றும் வட மாநிலங்களில் இவர் மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் காரணமாக அங்கெல்லாம் “இடஒதுக்கீடு’ குறித்த புதிய சிந்தனைகள் சீறிக் கிளம்பின. மண்டல் குழு அமைந்திடவும் நடுவண் அரசிலும் கல்வியில்-வேலை வாய்ப்பில்-இடஒதுக்கீடு வரவும் இவரின் பேருழைப்பே அடிப்படையாக அமைந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுக்கும்போது சாதிவாரிக் கணக் கெடுத்து அதனடிப்படையில் 100 விழுக்காடு இடங்களும் விகிதாசார அடிப்படையில் பகிர்வு செய்யப்படவேண்டுமென்பது இவர் வாழ்நாளிலேயே நடைமுறைப்படுத்தச் செய்திடல் வேண்டும் என்பது இவர் உறுதிப்பாடுகளுள் ஒன்றாகும்.
“இந்திய அரசியல் சட்ட’த்தை முழுமையாக சங்க இலக்கியத்தைக் கற்பதைப் போலக் கரைத்துக் குடித்த ஒரு சிலரில் இவரே முதலாமவர். “இந்திய அரசியல் சட்டம் ஒரு மோசடி’ என்ற சிறந்த நூலை எழுதி இந்திய தேசியத்தின் புரட்டுகளை, வெளிக்கொணர்ந்தவர் இவரே. “உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு’ என்ற வஞ்சகச் சட்டத்தை எதிர்த்துக் கிளர்ந் தெழுந்த இவர் வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்கச் செய்து இச்சட்டம் வெகு மக்களுக்கு எதிரானது என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.
2009 ஏப்பிரலில் இந்திய உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவித்தது “இட ஒதுக்கீட்டை எந்தக் குடிமகனும் ஓர் உரிமையாகக் கோரமுடியாது” என்ற மக்கள் விரோதக் கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில் இதன் நகலை 29.6.2009 அன்று தீயிலிட்டு எரித்து வெகுமக்கள் எதிர்ப்பினைக் காட்டவும் திட்டமிட்டுள்ளார். 2005 மே-சூன் திங்களில் இதழாளர் என்ற முறையில் இலங்கைப் பயணம் மேற்கொண்டு “தமிழீழத் தமிழரை-இலங்கை மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள், நீங்களும் பேசுங்கள்”-என்ற பெயரிலான நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்நூலில், தாம் கண்ட தமிழீழச் சிறப்புகளையும், ஈழத்தின் அழகையும், செழுமையையும், தமிழர்களின் செம்மாந்த வீரத்தையும் பதிவு செய்துள்ளார்.
2009 மே சிந்தனையாளனில் “ஈழ விடுதலையை நோக்கி…” என்ற இவரின் கட்டுரையில் ஈழ விடுதலையில் ஆர்வம் கொண்டோர் செய்யத் தவறியதையும், ஈழ விடுதலைக்கு நாம் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய பணிகளையும் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வாறு, தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளைத் தூக்கிச் சுமந்து களப்பணி ஆற்றிவரும் போராளியாக-அடுத்த தலைமுறைக்கும் எடுத்துக்காட்டான கொள்கை மறவராக பெரியாரின் தத்துவ விளக்கமாக இயங்கி வரும் தோழர் ஆனைமுத்து அவர்கள் 21.6.2009இல் 84 ஆண்டுகள் நிறைவடைந்து 85ஆம் அகவையில் காலடி வைப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.
இவரிடம் நாம் கற்க வேண்டியவையும் பின்பற்ற வேண்டியவையும் ஏராளமாக உள்ளன. காலையில் எழுந்து எழுதுதல், நடைப் பயிற்சி, செய்தித்தாள்கள் படித்தல், குறிப்பெடுத்தல், கட்சிப் பணிகள், எளிய உணவு, எளிய உடை, எளிய வாழ்க்கை, ஆடம்பரம்-விளம்பரம் விரும்பாத மனம், எவருக்கும் விலைபோகாத சுயமரியாதை, எதற்கும் அஞ்சாமல் கருத்துரைக்கும் நேர்மை, எதையும் திட்டமிட்டுச் செய்யும் ஒழுங்கு-இவைகளில் இவருக்கு நிகர் இவரே!
இளைய தலைமுறையை பெரியார் கொள்கைகளில் நனைத்தெடுக்க ஒரே வழி ஆண்டு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதுதான் என்பதை உணர்ந்ததால்தான் தோழர் ஆனைமுத்து அவர்கள் “பெரியார் ஈ.வெ.ரா.-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை’ என்ற நிறுவனத்திற்கு வித்திட்டார். அதை வளர்த்தெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அம்பத்தூரில் “பெரியாரிய-அம்பேத்கரிய” அடிப்படைக் கல்விக்கான கல்விக்கூடம் விரைவில் திறக்கப்பட உள்ளதன் வழி தந்தை பெரியாரின் தத்துவங்களை மேலும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வழியமைத்தார்.
பெரியார் ஈ.வெ.ரா.-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகள்
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் மறுபதிப்பு
தந்தை பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல்
பெரியாரின் கொள்கைச் செழுமைக்கு தோழர் வே. ஆனைமுத்துவின் பங்களிப்பு
எனப் பல்வேறு பெரும் பணிகளைத் தோழர் ஆனைமுத்து அவர்கள் ஏற்றுத் தன் 85 ஆம் ஆண்டு பிறந்த நாளில் தமிழ்ச் சமுதாயத்திற்கான தத்துவ வழிகாட்டியாக-போராளியாக-கருத்தாளராக நல்ல உடல் நலத்தோடு திகழ்ந்து பணியாற்றிட “சிந்தனையாளன்’, “பெரியார் ஊழி’ மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, புரட்சிக் கவிஞர் கலை இலக்கியமன்றம் ஆகியவைகளின் சார்பில் மனதார வாழ்த்துகிறோம். மார்க்சியம் பெரியாரியம்-அம்பேத்கரியம் வெல்ல இவர் பணிகளுக்கு எல்லா வழிகளிலும் நாம் துணையாயிருப்போம் என்பதை உளமாரத் தெரிவித்து மகிழ்கிறோம்!இடஒதுக்கீட்டின் பயனாக அரசுப் பணிகளில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று, வசதிகள் அடைந்துள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பு மக்கள் இதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அண்ணல் அம்பேத்கரையோ, தந்தை பெரியாரையோ நினைத்தும் பார்ப்பதில்லை. நன்றி பாராட்டாத இந்த மக்களுக்கான கடமைகளைத் தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை ஆற்றி முடிக்கச் சூளுரைத்து அதன்படியே வாழ்ந்தவர் தந்தை பெரியார் ஆவார். அவரின் அணுக்கத் தொண்டராகத் தம்மை வரித்துக் கொண்டு பெரியாரியலை உலகுக்கு உணர்த்தி வருபவர் தோழர் ஆனைமுத்து அவர்கள் ஆவார்.
தந்தை பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் நிரல்படத் தொகுத்து “பெரியார் ஈ.வ.ரா.சிந்தனைகள்’ என்ற மூன்று பெரும் தொகுப்புகளை வெளியிட்டதன் வழியாகப் பெரியாரை, படித்தவர் நெஞ்சில் பெரியாரை நிலைக்கச் செய்து விட்டார். தந்தை பெரியாரை மிகச் சிறந்த தத்துவமாகவே உணர்ந்த இவர் எழுதிய “பெரியாரியல்’ பல்கலைக் கழகங்கள் பாராட்டிப் பயிலும் நூலாகியுள்ளது. தந்தை பெரியாரின் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு; சமுதாய மேம்பாட்டிற்கான போராட்ட குணம் ஆகியவற்றோடு சமூக நீதிக்கான குரலையும் ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர் தோழர் ஆனைமுத்து அவர்களே!
1978இல் பாட்னா, பீகார் மற்றும் வட மாநிலங்களில் இவர் மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் காரணமாக அங்கெல்லாம் “இடஒதுக்கீடு’ குறித்த புதிய சிந்தனைகள் சீறிக் கிளம்பின. மண்டல் குழு அமைந்திடவும் நடுவண் அரசிலும் கல்வியில்-வேலை வாய்ப்பில்-இடஒதுக்கீடு வரவும் இவரின் பேருழைப்பே அடிப்படையாக அமைந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுக்கும்போது சாதிவாரிக் கணக் கெடுத்து அதனடிப்படையில் 100 விழுக்காடு இடங்களும் விகிதாசார அடிப்படையில் பகிர்வு செய்யப்படவேண்டுமென்பது இவர் வாழ்நாளிலேயே நடைமுறைப்படுத்தச் செய்திடல் வேண்டும் என்பது இவர் உறுதிப்பாடுகளுள் ஒன்றாகும்.
“இந்திய அரசியல் சட்ட’த்தை முழுமையாக சங்க இலக்கியத்தைக் கற்பதைப் போலக் கரைத்துக் குடித்த ஒரு சிலரில் இவரே முதலாமவர். “இந்திய அரசியல் சட்டம் ஒரு மோசடி’ என்ற சிறந்த நூலை எழுதி இந்திய தேசியத்தின் புரட்டுகளை, வெளிக்கொணர்ந்தவர் இவரே. “உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு’ என்ற வஞ்சகச் சட்டத்தை எதிர்த்துக் கிளர்ந் தெழுந்த இவர் வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்கச் செய்து இச்சட்டம் வெகு மக்களுக்கு எதிரானது என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.
2009 ஏப்பிரலில் இந்திய உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவித்தது “இட ஒதுக்கீட்டை எந்தக் குடிமகனும் ஓர் உரிமையாகக் கோரமுடியாது” என்ற மக்கள் விரோதக் கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில் இதன் நகலை 29.6.2009 அன்று தீயிலிட்டு எரித்து வெகுமக்கள் எதிர்ப்பினைக் காட்டவும் திட்டமிட்டுள்ளார். 2005 மே-சூன் திங்களில் இதழாளர் என்ற முறையில் இலங்கைப் பயணம் மேற்கொண்டு “தமிழீழத் தமிழரை-இலங்கை மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள், நீங்களும் பேசுங்கள்”-என்ற பெயரிலான நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்நூலில், தாம் கண்ட தமிழீழச் சிறப்புகளையும், ஈழத்தின் அழகையும், செழுமையையும், தமிழர்களின் செம்மாந்த வீரத்தையும் பதிவு செய்துள்ளார்.
2009 மே சிந்தனையாளனில் “ஈழ விடுதலையை நோக்கி…” என்ற இவரின் கட்டுரையில் ஈழ விடுதலையில் ஆர்வம் கொண்டோர் செய்யத் தவறியதையும், ஈழ விடுதலைக்கு நாம் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய பணிகளையும் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வாறு, தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளைத் தூக்கிச் சுமந்து களப்பணி ஆற்றிவரும் போராளியாக-அடுத்த தலைமுறைக்கும் எடுத்துக்காட்டான கொள்கை மறவராக பெரியாரின் தத்துவ விளக்கமாக இயங்கி வரும் தோழர் ஆனைமுத்து அவர்கள் 21.6.2009இல் 84 ஆண்டுகள் நிறைவடைந்து 85ஆம் அகவையில் காலடி வைப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.
இவரிடம் நாம் கற்க வேண்டியவையும் பின்பற்ற வேண்டியவையும் ஏராளமாக உள்ளன. காலையில் எழுந்து எழுதுதல், நடைப் பயிற்சி, செய்தித்தாள்கள் படித்தல், குறிப்பெடுத்தல், கட்சிப் பணிகள், எளிய உணவு, எளிய உடை, எளிய வாழ்க்கை, ஆடம்பரம்-விளம்பரம் விரும்பாத மனம், எவருக்கும் விலைபோகாத சுயமரியாதை, எதற்கும் அஞ்சாமல் கருத்துரைக்கும் நேர்மை, எதையும் திட்டமிட்டுச் செய்யும் ஒழுங்கு-இவைகளில் இவருக்கு நிகர் இவரே!
இளைய தலைமுறையை பெரியார் கொள்கைகளில் நனைத்தெடுக்க ஒரே வழி ஆண்டு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதுதான் என்பதை உணர்ந்ததால்தான் தோழர் ஆனைமுத்து அவர்கள் “பெரியார் ஈ.வெ.ரா.-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை’ என்ற நிறுவனத்திற்கு வித்திட்டார். அதை வளர்த்தெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அம்பத்தூரில் “பெரியாரிய-அம்பேத்கரிய” அடிப்படைக் கல்விக்கான கல்விக்கூடம் விரைவில் திறக்கப்பட உள்ளதன் வழி தந்தை பெரியாரின் தத்துவங்களை மேலும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வழியமைத்தார்.
பெரியார் ஈ.வெ.ரா.-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகள்
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் மறுபதிப்பு
தந்தை பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல்
பெரியாரின் கொள்கைச் செழுமைக்கு தோழர் வே. ஆனைமுத்துவின் பங்களிப்பு
எனப் பல்வேறு பெரும் பணிகளைத் தோழர் ஆனைமுத்து அவர்கள் ஏற்றுத் தன் 85 ஆம் ஆண்டு பிறந்த நாளில் தமிழ்ச் சமுதாயத்திற்கான தத்துவ வழிகாட்டியாக-போராளியாக-கருத்தாளராக நல்ல உடல் நலத்தோடு திகழ்ந்து பணியாற்றிட “சிந்தனையாளன்’, “பெரியார் ஊழி’ மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, புரட்சிக் கவிஞர் கலை இலக்கியமன்றம் ஆகியவைகளின் சார்பில் மனதார வாழ்த்துகிறோம். மார்க்சியம் பெரியாரியம்-அம்பேத்கரியம் வெல்ல இவர் பணிகளுக்கு எல்லா வழிகளிலும் நாம் துணையாயிருப்போம் என்பதை உளமாரத் தெரிவித்து மகிழ்கிறோம்!
சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா? வாலாசா வல்லவன்
சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் 1928 முதல் தமிழ்நாட்டில் நடத்தி வந்ததை அனைவரும் அறிவோம். சுயமரியாதை திருமணத்திற்கான தேவை ஏன் வந்தது என்றால் நமக்கு (சூத்திரர்களுக்கு) பார்ப்பன சாத்திரப்படி திருமணம் செய்துகொள்ள தகுதி இல்லை என்பதாலும், பார்ப்பான் நம்மை அவமரியாதையாக நடத்துவதாலும், நம்முடைய மொழியைஅவன் புறக்கணிப்பதாலும் சுயமரியாதைத் திருமணத்திற்கான தேவை ஏற்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் 1928 முதல் சுயரியாதை திருமணங்களை நடத்தி வந்தாலும், அவற்றில் பார்ப்பனர்கள் இல்லையயன்பதைத் தவிர சடங்குகள் இடம் பெற்றிருந்தன. முதன்முதலாக தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் குத்தூசி குருசாமிக்கும்-குஞ்சிதம் அம்மையாருக்கும் 8.12.1929இல் நடத்தி வைத்ததே சடங்குகளற்ற சாதி மறுப்பு திருமணம் ஆகும், அதன் பிறகு, தமிழகத்தில் வேகமாக சுயமரியாதைத் திருமணங்கள நடைபெற ஆரம்பித்தன.
சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் ஏன் தேவைப்பட்டது?
இன்றைய திராவிடர் கழகத் தலைவரான கி. வீரமணியின் மாமனாரின் (சிதம்பரம் செட்டியார்) முதல் மனைவியின் பிள்ளைகளுக்கும், மூன்றாம் மனைவியின் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக வழக்கு நடைபெற்று வந்தது.
அது என்னவென்றால், வீரமணியின் மாமனார் சிதம்பரம் செட்டியார் அவருடைய முதல் மனைவியின் பெயர் நாச்சியம்மை, இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தெய்வ யானை, முதல் மனைவி இறந்தவுடன் வள்ளி யம்மை என்பவரை இரண்டாவது மனைவியார் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மக்கள் இல்லை. அவரும் இறந்துவிட்டார். மூன்றாவது மனைவியாக திருவண்ணா மலையைச் சேர்ந்த ரெங்கம்மாள் என்ற ரெட்டியார் சாதியைச் சார்ந்த விதவையை 14.7.1934 இல் பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் சிதம்பரம் செட்டியாரின் முதல் மனைவியின் மகள் தெய்வயானை ஆச்சி என்பவர் தேவ கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் தன் தந்தை சிதம்பரம்-ரெங்கம்மாள் என்பவரை சுய மரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அத் திருமணம் செல்லாது, அவர்களது வாரிசுகளுக்கு என் தந்தை யின் சொத்தில் இருந்து பாகப்பிரிவினை செய்து கொடுக்கக் கூடாது என்பதே அவ் வழக்கு. சிதம்பரம் செட்டியார் தன் சொந்த உழைப்பில் வந்த சொத்தை யாருக்கு வேண்டு மானாலும் எழுதி வைக்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத் தீர்ப்பை எதிர்த்து 28.9.1948இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
நீண்ட நாட்கள் விசாரணை செய்யப்பட்டு 20.8.1953 அன்று சென்னை உயர்நீதி மன்றம் 25 பக்கத் தீர்ப்பை வழங்கியது. அத் தீர்ப்பில் புரோகித ஒழிப்புச் சங்கம் மூலம் செய்யப்பட்ட திருமணம் ஏற்புடையது அல்ல. சிதம்பரம் செட்டியாராக இருந்தாலும் அவருக்கு வைசியருக்கான தகுதி கிடையாது. அவர் சூத்திரர்தான், செட்டியார் சாதிக்கான சடங்கும் செய்யாமல், ரெங்கம்மாளின் ரெட்டியார் சாதிக்கான சடங்கும் செய்யாமல் இத் திருமணம் நடைபெற்றிருப்பதால் இதை, சட்டபூர்வத் திருமணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதுடன், இவர்களுக்குப் பிறந்த குழந்தை சட்டப்படியான வாரிசு அல்ல என்ற போதிலும் ஆதிகாலம் தொட்டே இந்துக்கள் வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கு சொத்து எழுதிவைக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. சிதம்பரம் செட்டியார் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. இதனால்தான் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் தேவைப்பட்டது. இந்தத் தீர்ப்பு வந்த உடனே அன்றைய இராசாசி அரசு சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொண்டது. சட்டமன்றத்தில் மசோதா முன்மொழியப் பட்டது. ஆனால் குலக்கல்வித் திட்டம் எதிர்ப்புப் போர் காரணமாக இராசாசி விரைவிலேயே ஆட்சியை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
1957இல் தி.மு.க.வைச் சேர்ந்த களம்பூர் அண்ணாமலை சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீவிரமாகப் பேசினார், அரசு செவி சாய்க்கவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்த செ. மாதவன் சுயமரியாதைத் திருமணச் சட்டம் தொடர்பாக ஒரு தனியார் மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்றும்படி வேண்டினார். அப்போதைய காங்கிரசு சட்ட அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் என்கிற பார்ப்பனர் அம் மசோதாவை தோற்கடித்தார்.
1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி யாகும்படி சட்டம் செய்ய தீவிர முனைப்பு காட்டி சட்ட மன்றத்திலும் 27.11.1967இல் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதற்கு 17.1.1968 அன்று குடிஅரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. 20.1.1968 நாளிட்ட அரசிதழில் இச்சட்டம் வெளியிடப்பட்டது.
இந்த சட்டம் முழு வெற்றியா என்பதுதான் என்னுடைய வினா?
முதலில் இந்தச் சட்டத்திற்கு பெயர் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் (Self Respect Marriage Validaity Act) என்று இருந்திருக்க வேண்டும். வேறு எந்தச் சட்டத்திலும் இதை பிணைத்திருக்கக்கூடாது. ஆனால் தமிழக அரசின் சட்டமோ இச்சட்டம் “1967ஆம் ஆண்டு இந்து திருமணச் (தமிழ்நாடு திருத்த) சட்டம்” எனப் பெயர். 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் (மத்திய சட்டம் 25/1955) 7ஆவது பிரிவுக்கு பின்னர் ‘7-A’ என்ற புதிய பிரிவை சேர்த்துக்கொள்வது என்கிற தன்மையில் அமைந்துள்ளது.
இந்து திருமணச் சட்டம்
சாதி வழக்கம் உள்ளூர் வழக்கம் போன்றவற்றிற்கு இடமுண்டு. இவறறை பயன்படுத்தி இது நீண்டகாலமாக நடப்பதால் 1928முதல் Local custom என்ற அடிப்படையில் இதில் நுழைக்கப்பட்டுள்ளது.
ஆரியச் சட்டங்கள் மிகவும் வலிமையானவை. சதபதி என்கிற மணவலம் 7 தப்படி வைக்கவில்லை என்றால்கூட திருமணம் செல்லாது என்று உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளை வழங்கி உள்ளது. ஆனால் நம்முடைய சட்டமோ பலவீனமானது இதையும் ஒன்றாக அதில் சேர்த்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சுவது போன்றது. நாம் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்க வழி செய்யாமல் சந்து பொந்து ஆளை தேடி ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன்.
எந்த இந்துச் சட்டம் நம்மை காலம் காலமாக சூத்திரனாக வைத்துக்கொண்டு இருக்கிறதோ அதே இந்து சட்டத்தில், இந்து திருமணச் சட்டத்தின் உட்பிரிவில் இதைச் சேர்த்திருப்பது எப்படி சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளுக்கு வெற்றியாகும். ஏற்கெனவே இந்து திருமணச் சட்டத்தில் எட்டு வகை திருமண முறை உள்ளது. இது ஒன்பதாவது வகை இந்து திருமண முறையாகும். அதற்கு மேல் இதில் என்ன உள்ளது?
மணமேடையில் பார்ப்பான் சூத்திரத் தன்மை இருக்காதே ஒழிய சட்டப்படி இத்திருமணம் செய்து கொண்டாலும் சூத்திரப்பட்டம் ஒழியப் போவது இல்லை. குறைந்த பட்சம் இந்தச் சட்டத்தை சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவிலாவது சேர்ந்திருக்க வேண்டும் (Special Marriage ACt 1882) இல் இயற்றப்பட்டது. இரண்டு வேறு வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் இத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்துகொள்ள வழிவகை உண்டு. எந்த இந்துச் சட்டம் நம்மை சூத்திரனாக வைத்திக்கிறதோ அதே இந்துச் சட்டத்தில் சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தைச் சேர்த்திருப்பதின்மூலம் அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி பலி என்பது போன்றதுதான் அது.
பகுத்தறிவாளர்கள் இதுபற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டுகிறேன்.

